*யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள்.
*கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது.
*யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது.
*ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00
ஒரு கிலோ பூண்டு ரூ2000.00
இப்படிப் பல!
*கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் இராணுவத் தளபதி.
*ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களால் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்டு, அம்மக்களுக்காய் இலங்கையின் தலைநகரில் நின்று குரல் கொடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டப்பகலில் இலங்கையரசின் கைக்கூலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்
இன்னும் பலப் பல
இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு இந்தியா இன்னுமேன் மெளனமாய் இருக்கிறது.
யாராவது பதில் சொல்லுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment